Kanganam (Novel) Perumal Murugan book pdf free download (Tamil Edition)
என் வாழ்வில் அறியாமல் நான் நிகழ்த்திய அற்புதம் என ஏதாவது ஒன்று இருக்குமானால் அது ‘கங்கணம்’தான். எப்படி இது நிகழ்ந்தது என வியப்படைவதுண்டு. என் அறிதலும் புரிதலும் உணர்தலும் ஒருங்கிணைந்து உருப்பெற்ற நாவல் இது. புறத்தில் உலவிக்கொண்டே அகத்திலும் பயணம் செய்ய முடியம் என்னும் நம்பிக்கையை இதன் மூலம் பெற்றேன். இது ஒரு பிரவாகம். பிரவாகத்தில் எதுவும் விடுபடுவதில்லை. மேலும் என் மொழியில் ஏற்பட்ட பெரும் உடைவு இதன் வழியே ஏற்பட்டது. கங்கணத்திற்கு முன் கங்கணத்திற்குப் பின் என என் எழுத்தைப் பிரிக்க நிலைக்கல்லாக இது இருக்கிறது. ஆனால் இந்நாவலை எழுதாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்த தருணங்களும் அனேகம். ஆம், மனிதன் எதற்கு அற்புதத்தை நிகழ்த்த வேண்டும்?